பாலியல் விலகல்களைக் கையாளுதல்
(பாலின அடையாளங்கள் மற்றும் ஓரினப் பாலுணர்வை கையாள்வதற்கான
உயர் மதிப்பீடுகள்)
அறிமுகம்:
பாலினம் மனிதகுலத்தின் வாழ்விற்கு
இன்றியமையாதது மற்றும் நம்மை அழகாக ஆக்குகிறது. ஆனால் பாலினம் பற்றிச் சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வு இல்லாததால்,
ஒரு தனிமனிதன் அதை ஒரு உணர்ச்சியாகவோ,
அடையாளமாகவோ அல்லது ஒரு செயலாகவோ தனித்து பார்க்கின்றான்.
அனைத்து அம்சங்களையும் சமநிலைப்படுத்தாமல் செயலாக மட்டுமே பார்க்கும்போது,
அது ஒரு நபரை மனச்சோர்வடையச் வைக்கலாம் அல்லது மிகைப்படுத்த வைக்கலாம், தாழ்ந்தவராகவோ அல்லது உயர்ந்தவராகவோ கருத செய்யலாம், தனிமைப்படுத்தவோ அல்லது வாய்ப்பைத் தேடவோ செய்யலாம். இரண்டு
உச்சநிலைகளும் ஆபத்தானவை, இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக இருந்தாலோ அல்லது சில காரியங்கள்
மாத்திரம் இணைந்திருந்தாலோ,
அது சுயத்தினிடத்திலோ அல்லது மற்றவர்களிடத்திலோ பெரும் எதிர்மறையான
விளைவை ஏற்படுத்தும்.
பாலியல் வேறுபாடுகள்:
"நான் யாருடன் படுக்கையைப் பகிர வேண்டும்?" மற்றும் "நான் யாராகப் படுக்கைக்குச் செல்ல வேண்டும்?"என்ற கேள்விகளுக்கான பதில் பாலுணர்வை பெற்றுள்ள ஒரு நபரின் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலியல் அடையாளத்தைப் புரிந்துகொள்ள
உதவுகிறது.
LGBT என்ற சுருக்கத்தில் ‘LGB’ பகுதி ஒருவரின் பாலியல் நோக்குநிலையைக் குறிக்கிறது.
லெஸ்பியன் (பெண்களிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட பெண்கள்),
ஓரினச்சேர்க்கையாளர் (ஆண்களிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்ட ஆண்கள்)
மற்றும் இருபாலினம் (ஒரே பாலின மற்றும் எதிர் பாலின ஈர்ப்புகள்). சுருக்கத்தில் ‘T’ (பாலினம் மாற்றத்திற்கு உள்ளானவர்) என்பது பிறக்கும்போதே ஒதுக்கப்படும் பாலின அடையாளத்துடன் ஒத்துப்போகாத
பாலின அடையாளத்தைக் குறிக்கிறது.
திரவத்தன்மை (Fluidity) என்பது பாலியலையும் அடையாளத்தையும் குறிப்பதில் முக்கியத்துவம் பெற்றதாகப் பரவலாகும் மற்றொரு கருத்தாகும். பாலுணர்வும் அடையாளமும் மாறாததும் நிலையானதும் அல்ல,
ஆனால் அவை மாறுவதும் திரவத்தன்மை உடையதுமாகும்,
சுதந்திரமாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவது என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
மூன்றாம் பாலினத்தைப் பற்றிய வேதாகமத்தின் பார்வை:
'அண்ணகர்'
என்பது தொன்மையான வார்த்தையாகும்,
இது நவீன சூழலில் மிகவும் தளர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.
மத்தேயு 19:12-ல் 'சிலர் அப்படி ஆக்கப்பட்டார்கள், சிலர் அப்படிப் பிறந்தார்கள்' என்று இயேசு பேசும்போது, அவர் பாலுணர்வு இல்லாமையைப் பற்றிப் பேசுகிறார்,
சூழ்நிலையில் அது 'மலட்டுத்தன்மையுள்ள' மனிதர்களைக் குறிப்பிடுவதாகவும்,
நவீன விவரிப்பாளர் மொழிபெயர்த்தார். இருப்பினும் இன்று நாம் பாலினம்-அல்லாத (பாலினம்
மாற்றத்திற்கு உள்ளானவர்) நபர்களைக் குறிக்க இதைப்
பயன்படுத்துகிறோம்.
“என் ஓய்வு நாட்களை அனுசரித்து,
எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு,
என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக்
குறித்துக் தேவன்
சொல்கிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும்,
என் மதில்களுக்குள்ளும் மகன்களுக்கும் மகள்களுக்கு உரிய
இடத்தையும் புகழ்ச்சியையும் விட, உத்தம இடத்தையும் புகழ்ச்சியையும் கொடுப்பேன் என்றும்
அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்.” (ஏசாயா 56:4,
5)
மேலும், LGBT மற்றும் LGBT அல்லாத சமூகம் ஆகிய இரண்டிலும் உள்ள
நாம் இந்த வீழ்ச்சியடைந்த உலகின் ஒரு பகுதி என்பதை புறக்கணிக்க அடிக்கடி
முனைகின்றோம்! நாம் அனைவரும் வீழ்ந்த மக்கள். நாம் அனைவரும்
பாலியல் ரீதியாக உடைக்கப்பட்டுள்ளோம்!
சிக்கலான தன்மை மற்றும் குழப்பம்:
பாலியல் வேறுபாடுகள் மற்றும் LGBT யைப்
புரிந்துகொள்வது சந்தேகத்திற்கு இடமின்றி சிக்கலான ஒன்றாகும். இது ஒழுக்கம் சார்ந்தது மட்டுமல்ல. இது உணர்ச்சி,
உடல், உளவியல் மற்றும் சமூகவியல் சிக்கல்களைக் கொண்டுள்ளது. 1970களில் அடையாளப் பெயர் LGB (லெஸ்பியன் (lesbian), கே (gay),
இருபாலினம் (bisexual)) என்ற சுருக்கப் பெயரைக் கொண்டிருந்தது,
மேலும் இது தற்போது LGBTQQIP2SAA (லெஸ்பியன் (lesbian),
கே (gay),
இருபாலினம் (bisexual),
திருநங்கை (transgender),
விந்தையானவர் (queer),
கேள்வி கேட்பவர் (questioning), இன்டர்செக்ஸ் (intersex),
பான்செக்சுவல் (pansexual),
2-ஸ்பிரிட்டட் (2-spirited), பாலினம் இல்லாதவர் (asexual) மற்றும்
அனைத்திலும் ஈடுபடுபவர் (allies)) எனப் பரிணமித்தது.
துரதிர்ஷ்டவசமாக, பொது மக்கள் தொகையில் 1.6 சதவீதத்துடன் இருக்கும் 41 சதவீத திருநங்கைகள் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.
LGBT யுடன்
தொடர்புடைய எண்ணங்களை நாம் பச்சாதாபத்துடனும் புரிந்து கொள்ளுதலுடனும்
அணுக வேண்டும், மேலும் நமது எண்ணங்களினாலும் வெளிப்பாட்டினாலும் மக்களையும்
கடவுளையும் குறைத்து மதிப்பிடாமல் சமூகத்தின் உணர்ச்சிகளைக்
கருத்தில் கொண்டு மற்றும் உணர்வுபூர்வமாகப்
பதிலளிக்க வேண்டும்.
பாலுணர்வின் கட்டமைக்கும் தன்மை மற்றும் அழிக்கும் தன்மை:
ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் பாலுறவின் தன்மை சிறப்பு வாய்ந்தது. நமது எண்ணங்கள் மற்றும் செயல்பாட்டின்
அடிப்படையில் அது சுயத்திற்கு அல்லது பிறருக்கு
அழிவுகரமானதாகவோ அல்லது ஆக்கப்பூர்வமானதாகவோ இருக்கலாம். ஒரு நபர் சுய அடக்கத்துடன் செயல்படாதபோதும்,
எதைச் செய்தாகிலும் முடிந்தவரை
தன்னை திருப்திப்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும்போதும் அது அழிவுகரமானதாக இருக்கலாம். ஒரு நபர்
தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கமாக இருக்க விரும்பும் ஒருவருடன் கட்டுப்பாடு
மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் போது அது
ஆக்கபூர்வமானதாக இருக்கலாம்.
பாலுணர்வின் செயலால் பாலுறவுப் பிரச்சனையை தீர்க்க முடியாது, ஏனெனில் அது ஒரு தனிநபரின் பாலியல் ஆற்றல் முழுவதுமாகக் குறைந்து போகும் வரை
அதைத் தீவிரப்படுத்துகிறது. ஆனால் அர்ப்பணிப்பும்
நெருக்கமும் பாலுறவுச் செயலைச் சுவாரஸ்யமாக்குகிறது மற்றும்
பாலியல் ஆற்றல் முழுவதுமாகக் குறைந்த
பிறகும் வாழ்க்கையை மேலும் திருப்திகரமாக்குகிறது,
அதுவே கடவுளின் படைப்பின் அழகு மற்றும் பாலுணர்வின்
பின்னால் உள்ள அற்புதமான வெளிப்பாடு. பாலுணர்வு என்பது ஒரு நபருடைய வாழ்க்கையின்
ஒரு பகுதியாகும், இது வேறு சில உணர்ச்சிகள் மற்றும் அறிவாற்றலுடன்
சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.
நாம் நமக்கான உரிமைகளை பெறுவது போல் மற்றவர்களும் அவர்களின் உரிமைகள்
அல்லது சலுகைகளைப் பெற அனுமதிப்பதை நாம் நடைமுறைப்படுத்தலாம்,
மற்றவரால் புண்படுவதை நாம் அனுமதிக்காதது போல மற்றவரைப் புண்படுத்தும் செயலைச் செய்யாமல்
இருக்கலாம். நாம் நம் வாழ்க்கையை வாழ முயல்வது போல் மற்றவர் மகிழ்ச்சியாகவும்
மரியாதையாகவும் வாழ அனுமதிக்கலாம்.
ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது மற்றும்
ஏற்றுக்கொள்ள முடியாதது:
பண்டைய நாட்களில், சில ஆண்கள் ஆண்களுடன் கூட உடலுறவு கொள்ள மிகவும் கொடூரமாக நடந்துக்கொண்டனர் (ஆதியாகமம் 19:5,
நியாதிபதிகள் 19:22).
பெண்களுக்கிடையேயும் ஓரினச்சேர்க்கை இருந்தது (ரோமர் 1:26).
ஓரினச்சேர்க்கை ஒரு வெறுக்கத் தக்க பாவம் (லேவி. 18:22),
அதைச் செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும் (லேவி. 20:13).
இங்கே, பாலுறவு சுய திருப்திக்காக மட்டுமே என்பதும் அது இயற்கைக்கு
மாறானது என்பதும் தெளிவாகிறது.
ஓரினச்சேர்க்கை பல சர்ச்சைகளுடன் நியாயப்படுத்தப்படலாம்,
ஆனால் மனித பாலினத்தின் சாராம்சம் ஆணும் பெண்ணும் ஆகும்,
இருப்பினும் அது உடல் மற்றும் மனநிலையில் சர்ச்சைக்குரிய
வகையில் வேறுபடலாம். பாலுணர்வின் பிரச்சனை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது,
இது கடவுளுடைய மதிப்பீடுகளுடன் சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
சிலர் உடல், மனம் அல்லது சமூகப் பிரச்சினைகளால் சரியான
பாலின அடையாளம் இல்லாமல் இருக்கிறார்கள், அவை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் சரியான முறையில்
கையாளப்பட வேண்டும். இருப்பினும், சிலர் சுய திருப்திக்காகப் பாலினம் மாற்றத்தைத் தேர்வு செய்கிறார்கள்,
அதே பாலினத்துடன் உடலுறவு கொள்வதையும் தேர்வு செய்கிறார்கள்,
இது தீமையானது.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி
நம்மைச் சுத்திகரிப்பதற்கு கடவுள் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார். – 1 யோவான் 1:9
முடிவுரை:
இறையாண்மையும் சர்வவல்லமையும் கொண்ட கடவுள் ஒருவரே பாலுறவு இச்சைகளைக்
கட்டுப்படுத்த முழுமையாக வழிகாட்டி உதவ முடியும், நமக்கு எல்லாவிதத்திலும் வரம்புகள் மற்றும் இயலாமைகள் இருப்பினும்
கடவுள் தாமே சரியான நபருடன் சரியான இடத்தில்
சரியான நேரத்தில் செயல்பட உதவுவார். எல்லாவற்றிற்கான காரணரை நம்புவது, பாலுணர்வை இன்பம், இனப்பெருக்கம் அல்லது நெருக்கம் ஆகியவற்றிற்கு ஆக்கபூர்வமான
தன்மையுடன் பயன்படுத்த உதவுகிறது.
தேவன் படைத்தவைகள் அனைத்தும் நல்லதாக இருக்கிறது;
நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்படுமானால் ஒன்றும்
தள்ளப்படவேண்டியது இல்லை. அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். –
1 தீமோத்தேயு 4:4, 5
LGBT யின் தீய நோக்கமுள்ள பாலியல் செயல் மற்றும் வாழ்க்கை முறையைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு நாம் மிகவும் கருணையுடன் இருக்கிறோம் அல்லது ஆறுதலளிக்கிறோம். அல்லது நாம் மிகவும் உண்மையுள்ளவர்களாகவும், மூடத்தனமான மனிதர்களாகவும் அவர்களை மீட்க முயலாமல் நோகடித்து நொறுக்கி இருக்கிறோம்.
உடல் ரீதியாக ஆண், ஆனால் உளவியல் மற்றும் உயிர்வேதியியல் ரீதியாகப் பெண்,
மற்றும் நேர்மாறாக இருக்கும் உண்மையான மக்கள் உள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும். சிலர் தாங்கள் உண்மையில் இருக்கும் பாலியல் நிலையில் இல்லாமல்,
பாலியல் இன்பங்களுக்காகத் தங்களை வித்தியாசமான பாலினமாகச் சித்தரிக்கின்றனர்.
அவர்கள் இருவரும் பாதுகாப்பின்மை மற்றும் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர்,
மேலும் முதல் வகை மக்களுக்குத் தங்களைத் தாங்களே கட்டியெழுப்பவும், அவர்கள் அவர்களாகவே
இருக்கவும் ஆதரவு தேவை, இரண்டாவது வகை மக்களுக்குத் திருத்தம் மற்றும் நல்லிணக்கம் தேவை.
நாம் அனைவரும் கடவுளின் சாயல் மற்றும் நமது அடையாளமும் நோக்கமும் கடவுளுக்குள்
வரையறுக்கப்பட வேண்டும் (ஆதி. 1: 26-30), அப்படி செய்யும் போது நாம் நமது உடல்,
மனம்,
உளவியல் மற்றும் சமூக அம்சங்களால் பாதிக்கப்படாமல்,
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைச் சமநிலையுடன் கடவுளின்
சர்வாயுதங்களுடனும் (எபே. 6:10-18)
ஆவியின் கனிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் (கலா. 5:22,
23) எப்பொழுதும்
மனந்திரும்புதல், சமரசம் செய்தல் மற்றும் புதுப்பித்தலுடன் கையாள்வோம்.
நாம் யாராக இருந்தாலும், எப்போதும் அடையாளத்தை அளிப்பவர்,
மீட்பவர், மீட்டெடுப்பவர், மாற்றம் அளிப்பவர், மற்றும் அனைத்தையும் புதியதாக்குபவர் ஆகிய இயேசு கிறிஸ்துவை நாம் நோக்கிப் பார்க்க
வேண்டும்!
மேற்கோள்கள்:
பரிசுத்த வேதாகமம்- நீதிமொழிகள் 18:2;
மத்தேயு 19:12; ஏசாயா 56: 4, 5; ஆதியாகமம் 19:5,
நியாதிபதிகள் 19:22;
ரோமர் 1:26; லேவியராகமம் 18:22; லேவியராகமம் 20:13; 1 யோவான் 1:9; 1 தீமோத்தேயு 4:4, 5; ஆதியாகமம் 1:
26-30; எபேசியர் 6:
10-18; கலாத்தியர் 5:
22, 23.
https://blog.saftapologetics.com/the-christian-response-to-homosexuality-part-1/
https://blog.saftapologetics.com/the-christian-response-to-homosexuality-part-2/
https://blog.saftapologetics.com/the-christian-response-to-homosexuality-part-3/
No comments:
Post a Comment